Skip to main content

Posts

Showing posts from 2025

சார், ஒரு சின்ன உதவி

  உ ங்கள் முன் அன்பு வெறுப்பு என்று இரண்டே இரண்டைக் காட்டினாரே  அவர் நிஜமாலுமே அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனும்தான். அதே அளப்பறிய கருணையாளன் இதோ…என் முன்  எண்ணற்ற விதவிதங்களை  உருட்டி விடுகிறார் அன்பு போல் தோன்றும் வெறுப்பு வெறுப்பு போல் தெரியும் அன்பு அன்புதான் என்று உறுதி சொல்லமுடியாத அன்பு வெறுப்பென்று இறுதி  செய்துவிட முடியாத  வெறுப்பு அன்பின் வெள்ளைக்கரு மூடிய வெறுப்பின் மஞ்சள் கரு முக்கால் வெறுப்பில்  துளியூண்டு     அன்பைக் கலந்து   கடைந்த  ஒன்று முழு அன்புள்  நெளியும்  வெறுப்பின் சிறு புழு அன்பின் ஆடை அவிழ்ந்து விடாமல்  காக்கும்  வெறுப்பின் இடைக்கச்சை வெறுப்பின் வதனத்தில் அன்பின் அழகிய மைத்தீற்றல் ரஹ்மான் சார், எனக்கு ஒரு நல்வழி காட்டக் கூடாதா?

இரண்டு கவிதைகள்

  1 ம னசு தோள் மீது கைவைத்து மெல்ல அழுத்தி "மனசைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்.." என்றான் இத்தனை ஆண்டு கால நட்பில் நானும் அவனும் மனசைக் குறித்து ஒரு முறை கூட பேசிக் கொண்டதில்லை. நான் உறுதி பூண்டேன்.. காவல் காத்தேன். மனசைப் பார்ப்பதைத் தவிர வேறொன்றையும்  பார்க்கவில்லை ஆயினும் பார்க்கப் பார்க்கவே நான் பார்க்கப் பார்க்கவே அது  பத்திரத்துக்கு அப்பால் சென்று கொண்டிருக்கிறது * 2 கு ட்டிச்சுவர் மீதொரு குட்டிச்சுவர் இருளில் மூழ்கிக் கிடக்கும் இந்தக் குட்டிச்சுவர் மீது கொஞ்ச நேரம் அமர்ந்திருந்தால் கண்ணீர் குறையும்  என்று தோன்றுகிறது அதுதானே என் தொட்டில் 

பச்சைப் பலகையே! பச்சைப் பலகையே!

  பெசண்ட் நகர்- 9 கி.மீ என்று போட்டிருந்தது. ஒன்பது கிலோ மீட்டர் ஒன்பதே கிலோ மீட்டர் எவ்வளவு அழகான 9 ! பஸ்ஸில் போகலாம் பைக்கில் போகலாம் ஆட்டோவில் போகலாம் வாடகைக் காரில் போகலாம் ஒரு கார் வாங்கி அதில் கூடப் போகலாம் அம்புக் குறி காட்டும் வழியில் எவ்வளவு மெதுவாக நடந்தாலும் அந்திக்குள் அடைந்து விடலாம் ஆனாலும் அந்த ஊரை நீ  இப்படி கூவிக் கூவிக் நிறைக்காதே! காதுக்குள் முழக்காதே!

இசை கவிதைகள்

  எதையும் மறந்துவிடவில்லை அல்லவா?  புறப்பட்டுப் போகப் போகிறது மே ஃப்ளவர் * ஒரே ஒரு சின்னச் சிக்கல் இல்லாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும் நீ அதில் சிக்கல் என்னவெனில் நீ இருப்பது * வெஞ்சரம் நஞ்சில் புரட்டிய அம்பால் இதயத்தின் ஆழத்தைக் குடைவது வெகு எளிது உனக்கு ‘நீ’ யிலிருந்து ‘ நீங்களு’க்காய் ஒரு நொடிப் பொழுதின் சாகசம் * பார்க்கப் பார்க்க உன் ஈரக்கூந்தலை அடித்து உதறியதில் தெறித்த திவலைகளென வெளி முழுக்கச் சிவந்து நிற்கிறது மே ஃப்ளவர் ஜுன் வந்து கொண்டிருக்கிறது * நன்றி அகழ்! https://akazhonline.com/?p=10173

எப்படி எழுந்தனவோ

கவி தன் கவிதையைக் குறித்து தானே பேசுவதில் சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன. அந்தப் பேச்சில் இயல்பாக எழுந்து வரும் தற்பெருமை ஒரு  சிக்கல். தன் கவிதை குறித்து தானே பேச முனைகையில் எழுகிற சலிப்பு ஒரு சிக்கல்.  கவிக்கும் தன் கவிதையின் நதி மூலம் குறித்து  தோராயமாக அன்றி   துல்லியமாகத்  தெரிந்து விடாது என்பது இன்னொரு சிக்கல். பேசிப் பேசி கண் முன்னே தன் கவிதையின் அழகுகள் கரைந்து செல்வதை  அவன் சற்றும் விரும்புவதில்லை என்பது முக்கியமான சிக்கல். விளக்க முடியாத ஒன்று கவிதைக்குள் இருப்பதைப் போன்றே விளக்கக் கூடாத ஒன்றும் கவிதைக்குள் இருக்கிறது. ஆனாலும் கவிகள் கால காலமாக கவிதையைக் குறித்து பேசி வந்திருக்கிறார்கள். அதற்கு இலக்கணங்கள் வகுத்திருக்கிறார்கள். கவிதை அந்த இலக்கணங்களை உடைக்கையில் அதற்கு புதிய இலக்கணங்களை படைத்திருக்கிறார்கள்.தனது முழுத்தொகுப்பிற்கான முன்னுரையில் சுகுமாரன் எழுதியிருக்கும் ஒரு வரி “கவிதையாக்கம் குறித்துக் கொண்டிருந்த கொள்கைகளையும் பிடிவாதங்களையும் கவிதையே காலாவதி ஆக்குவதை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்”.  இந்த உற்சாகம்தான் கவியைய...

மூன்று கவிதைகள்

மு தல் கனி  அந்தக் குழந்தை உலகிற்குப் புதுசு மூடிய காருக்குள்ளிருந்து கண்ணாடி வழியே வெளியே பார்த்தபடி வருகிறது சிக்னல் நிறுத்தத்தில்  ஒரு சிறுவன் காக்கி நிஜாரில் மேலாடையின்றி வியாபாரி போல் வந்தவன் அவன் தன் அழுக்குக் கையால் கூடைக் கொய்யாக்களில் ஒன்றினை எடுத்து குழந்தைக்குக்  காட்டுகிறான் காட்டிய  கணத்திலேயே ஊட்டியும் விட்டுவிட்டான் எட்டினால் தட்டிவிடும் தூரத்தில்தான் இருக்கிறார் அதன் அப்பா ஆனாலும் அதற்குள் அவ்வளவு தூரங்கள் அவரால் ஓடிவரக் கூடவில்லை. * க ண்டேன் சற்றே பெரிய ஊடல் போல அவள் சிரி... சிரி... சிரி..  எனக் கெஞ்சிக் கொண்டிருந்தாள் அவன்  துளியும் அசைந்துவிடாது  நின்று கொண்டிருந்தான் அவள் கன்னச் சதைகளை  இழுத்து இழுத்து விட்டாள் இறுக்கத்துள் கை நுழைத்து உதடுகளைப்  பிரித்து வைத்தாள் கடைசிவரை சிரிக்கவில்லை கல் அங்கே சிரித்துக் கொண்டிருந்த இன்னொன்றை நான் கண்டு சிரித்தேன். * ம னைவியின் முதல் கவிதை "பாயுது பாயுது நீரு பல எண்ணங்கள் போலே- வருது தண்ணீரு..." என்று முதல் அடி எடுத்தவள் ஏனோ  கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டாள் ஏரியைக் காட்டிலும் ஆ...

ஒளித்தொழித்தல்

எ ன் காதலைக் கையள்ளித் தெளித்தால் பல யோசனை தூரங்களுக்கு பச்சைப் பசேல்கள் காற்றாடி நிற்கும் அதைத்தான்… அன்பே….! அதைத்தான் நீ ஒளித்து வைக்கச் சொல்கிறாய்

ஆசை ஆசையாய்

  வெ ண்கலத்தில் இரும்பில் மரத்தில் பளிங்கில்,  பனியில் நின்ற கோலம் அமர்ந்த கோலம் கிடந்த கோலம் என கோலா கோலங்களில் ஷாப்பிங் மாலில் ஹோட்டல் முகப்பில் பெட்டாலியன் விடுதியில் முழு உருவில் தனித்தலையில் இரு விழியில் பேருந்தில் காரில் ஆட்டோவில் கருப்பில் வெளுப்பில் வண்ண வண்ணங்களில் மிகப் பெரிதாக சின்னஞ்சிறியதாக சுமாராக என ஆசை ஆசையாய் சிதறிக் கிடக்கும் அவ்வளவு  புத்தர்கள்

மூன்று கவிதைகள்

ந றுமணம் கொண்ட விசாலமான படுக்கை நட்சத்திர விடுதியின் விசாலமான அறையைத் திறந்து காட்டிய  பணியாள்  "நன்றி!"  என்று சொல்லிவிட்டு நகர்கிறான். நான் உடைந்து அழுகிறேன் * க சப்பின் குஷன் நான் மீண்டும் கசப்பிற்குத் திரும்பினேன். மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது கசப்பு  ஒரு செளகர்யம் ஆதுரம் மேலும் அது எனக்கு நன்கு பரிச்சயமானது அதில் பரபரப்பில்லை. பதற்றமில்லை சாகசங்களில் வெறி மூண்ட  வேட்டையாள் ஒருவன் துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு இப்போது புளியமரத்தடியொன்றில் தலை சாய்த்துக் கிடக்கிறான் கசப்பில் கசப்பைத் தவிர  வேறு ஒன்றுமேயில்லை முக்கியமாக இனிப்பில் இருக்கிற "உள்ளே என்ன இருக்கிறதோ?"  என்கிற வெடிகுண்டில்லை * எ ல்லாவற்றிற்கும் நன்றி! காதலர் வெடித்துச் சினக்கின்றனர். கண்ணீர் வடிக்கின்றனர். பிரிவே உத்தமம்  என்று  உறுதி பூண்கின்றனர் "எல்லாவற்றிற்கும் நன்றி!"  என்றவர்கள் பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில் "எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்... அது யாருடைய குரல்