வெள்ளையிலிருந்து
எல்லா வண்ணங்களும் பிறக்கின்றன.
குறிப்பாக
எலுமிச்சைநிறமும் ரோஸ்கலரும்.
வெள்ளைக்கலருக்கு
விண்ணப்ப படிவம் இல்லை
தேர்வுகள் ஏதுமில்லை
அது நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
வெள்ளைக்கலரை சிரிக்க வைக்க
எத்தனை நகைச்சுவைகள்
கடைந்தெடுக்கப்படுகின்றன.
வெள்ளைக்கலரை மகிழ்விக்க
எத்தனை கவிஞர்கள்
இரா காக்கிறார்கள்.
வெள்ளைக்கலரின் ஏடு
பத்திலிருந்து நான்கைக் கழித்தால் ஐந்தென்கிறது.
கண்டிப்பான தணிக்கையாளன்
அதை மனப்பூர்வமாக ஒப்புக்கொள்கிறான்.
வெள்ளைக்கலரின் முன்னே
எத்தனை மனிதர்கள் உடைந்து சிதறுகிறார்கள் .
எவ்வளவு மதுப்புட்டிகள் திறக்கப்படுகின்றன.
எவ்வளவு கண்ணீர் கொட்டப்படுகிறது.
சாக்கைடையோரம் கிடந்து
அழுகியபழம் தின்பவர்களில்
எத்தனை பேர்
வெள்ளைக்கலரால் பீடிக்கப்படவர்கள்
வெள்ளைக்கலரை சாரட்டில் வைத்து
மேதாவிலாசம் வண்டியிழுப்பதை
பார்த்துச்சலிக்கிறது வரலாறு.
Comments