Skip to main content

பயனிலி


                 

செல்ஃபோனே கெடுதி என்பதுதான் அறிஞர்கள்  தரப்பு
அது சிட்டுக்குருவிகளை அழித்துவிட்டதாக சொல்கிறார்கள்
பேசப்பேச வெடித்து விடுமென்றும் சொல்கிறார்கள்
அதன் கதிர்வீச்சால் எண்ணற்ற தீமைகள் விளையக்கூடும்
என்கிறார்கள்.
நேரத்தைக் கொல்லுதல்,
உள்ளத்தைக் கெடுத்தல்,
அறிவை மயக்குதல்
இவையெல்லாம்  உபரி தீமைகள்.
அதை கீழ்பாக்கெட்டில் வைத்தால்
ஆண்மை குறைந்துவிடும் என்றார்கள்
மேல் பாக்கெட்டில் வைத்தால்
இருதயம் கெட்டுவிடும் என்றார்கள்
ஆனாலும் எங்கேனும் வைத்தாக வேண்டுமல்லவா?
நான் நன்றாக சீர்தூக்கிப் பார்த்து
மேல்பாக்கெட்டில் வைப்பதென்று முடிவு செய்தேன்.
பொதுவாகவே 
நான் இதயத்தை அதிகமாக உபயோகிப்பதில்லை.


Comments

karur karthik said…
உபயோகப்படுத்த வேண்டியதை நானும் பத்திரப்படுத்திக்ளொள்கிறேன் இசை

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...