அரைமணி நேரத்து பிரிவுக்கு அஞ்சி நீ அனுப்பி வைத்த எருமைகளில் சேறும், பாலும் கமழ்ந்தன. அதன் கொம்பிற் மின்னியதொரு வனமலர். பிறகு வந்ததொரு கொடுங்காலம் எருமை வரத்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து அருகி ஒழிந்துவிட்டது. என்னதான் ஆனதடி நம் எருமைகளுக்கு? நேற்று , அவை அருவெங் கானத்திடை துளிநீர் வேட்கையில் மயங்கிய போழ்தில் உழுவை சீற, உள்ளம் நடுநடுங்கி கதவுடைத்து வந்து என் கனவுக்குள் ஒளிந்ததடி தோழி!! |
Comments