நான் காத்திருக்கிறேன். எதற்கென்று எனக்குத் தெரியாது. ஒவ்வொரு விடியலிலும் அவ்வளவு ஆவலோடு கதிரவனிடம் கேட்கிறேன்... "இன்றெனக்கு என்ன கொண்டு வந்திருக்கிறாய்..?" எனக்குத் தெரியும். அது எதுவும் பேசாது. நான் காத்திருக்கிறேன் எதற்கென்று எனக்குத் தெரியாது. எண்ணெய் படிய தலைவாரிக் கொண்டு சாலையின் இடதுபுறமாக அலுவலகம் போய் வருகிறேன். நான் காத்திருக்கிறேன் ஆனால் எதற்கென்று உறுதியாக எனக்குத் தெரியாது. |
Comments