வி ச்ராந்தியின் முன் நிற்றல் பெசண்ட் நகரில் கடலுக்குச் செல்லும் வழியில் உள்ளது விச்ராந்தி நண்பர்கள் நாங்கள் ஒரு நாள் தவறினாலும் மறுநாள் கூடிவிடுவோம் அங்கு விச்ராந்தியின் முன் நிற்பதற்கு தூர தூரங்களிலிருந்தும் ஆட்கள் வருகிறார்கள் அங்கு பென்னம் பெரிய ஒரு மரமுண்டு அதுதான் அனைவரையும் அழைத்து வருகிறது என்று சொல்லப்படுவதுண்டு ஆனால் அது உண்மையின் ஒரு துண்டுதான் மனிதருள் மரமுண்டு நிழலுண்டு விச்ராந்தியின் முற்றத்திற்கு மரங்கள் வருகின்றன , போகின்றன விச்ராந்தியின் முன் நிற்கும் ஒருவன் சிகரெட்டை கொளுத்தினால் அவன் வாயிலிருந்து ஏகாந்தம் மிதந்து செல்வதைக் காணலாம் மனிதர்கள் சமயங்களில் துணிந்து முடிவெடுத்து விடுகிறார்கள் சிரிப்பைச் சவுக்கால் அடித்து விட முடியாது விச்ராந்திக்கு கண்ணோ, மூக்கோ கிடையாது அது ஒரு முழு காது விச்ராந்தியின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டால் படத்தில் நாம் ஒரு டீ கடையின் முன் நிற்பது போலவே தோன்றும். • ஆ த்மாநாமின் புதிய கவிதை ஒரு ரோஜா நாற்று வாங்கி வந்தேன் வீட்டில் அதற்கு எந்த இடம் பிடித்திருந்ததோ அந்த இடத்தில் நட்டு வைத்தேன். ஒளி தந்தேன் நீர் தந்தேன் இ...