Skip to main content

ஆங்கிலத்தை இவர்கள் அறிவில்லா முண்டமெனக் கருதிவிட்டார்கள்



“தூங்காதே தம்பி…தூங்காதே..” என்பது

காலாவதியாகிவிட்ட ஒரு அறிவுரை


இன்றோ

“தூங்குங்கள்…! தூங்குங்கள்..! என்று

கை கூப்பி வேண்டுகிறது மருத்துவம்


அவர்கள் இருவருமே

தேக ஆரோக்கியத்தில்

கவனம் கொண்டவர்கள்

ஆகவே

சரியாக பத்துமணிக்கு

“good night” சொல்லிக் கொள்வார்கள்.


அரைமணி நேரம்  கழித்து

அடுத்த “ good night “


“ good night ..!”


“ good  night…!”


“Good  night” க்கு தானொரு 

“good night” தானா என்பதில்

கொடூரமான குழப்பங்கள் தோன்றிவிட்டன


அது புரட்டிய அத்தனை அகராதிகளும்

ஆலோசித்த அவ்வளவு அறிஞர்களும்

“good night “  என்றால் " good night" தான்

என்று சொல்லி

அதை நட்டாற்றில் விட்டுவிட்டார்கள்


இரும்புக் கதவில் 

தலையை முட்டிக் கொண்டு

அது இரத்தம் பெருக்கிய பொழுதில்

அவர்கள் 13 வது “ good night” 

சொல்லிக் கொண்டார்கள்.


சிற்றஞ்சிறுகாலை என்கிற

“ good morning “ - ல்

“ ok.. good night ..“ என்றவர்கள்

அலுத்துக் கொண்ட போது

ஆங்கிலத்திற்கு வெறி மூண்டுவிட்டது

இரண்டு பொடணியிலும்

பொளோர் பொளோரென

நான்கு போடு போட்டது…


“எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை  உண்டல்லவா? “


Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை