புதிதாக
ஒரு டூ- வீலர்
வாங்கிய சந்தோசத்தை
சுக்குநூறாக
உடைத்துப் போட்டது
அதன் முகப்பில்
வடிக்க ஒரு பெயர் இல்லை
எனும் உலக
வழக்கம்
குதூகலத்தின்
முகத்தோடு
வீட்டிற்குள்
நுழைந்துவிட்டு
இன்று கெட்டியான துக்கமாய்
சாய்ந்து
நிற்கும்
அதையே
வெறித்துக் கொண்டிருந்தது அத்தம்பதி
எல்லாம் சில
நிமிடங்கள்தான்
பிறகு
"
விராட் கோலி “
அம் மனக்குறையை
விரட்டி அருளினார்.
Comments