Skip to main content

இளிப்பபுக் கவிதைகள்


                                 







இளிப்பு - 1


காலத்திற்கு
அணையவே அணையாதே இளிப்புப்பசி
தீரவே தீராத இளிப்பு நோய்
அதற்கு
நாள்தோறும் கணந்தோறும் 
இளித்துக் கொண்டே இருக்க வேண்டும்

தயவுசெய்து காலத்தின் மேல் புனித அங்கியைப்
போர்த்தாதீர்...
அது
கிழட்டு ஜீவன்களின் நடைவழிகளில் 
குச்சியை குறுக்கே விடும் சிறுவன்
         அல்லது
முத்தமிட்டபடியே தொடையை அடைந்து
சிகரெட்கங்கை யோனிக்குள் திணிக்கும் நஞ்சகன்

காலத்தின் விக்ரகத்திற்கு திருமஞ்சனம் செய்யாதீர்...
அதற்கு
நாள்தொறும் கணந்தொறும் இளித்துக் கொண்டே இருக்க வேண்டும்
அப்படி இளிக்க ஏதும் சிக்காமல்தான்
நேற்று
பாலத்தின் மீது பயணித்துக் கொண்டிருந்த குழந்தைகள் பேருந்தை
லைட்டாக ஆட்டிப் பார்த்தது அது.


       
                       இளிப்பு - 2


எது நடந்துவிடக் கூடாது
என்று    வாழ்நாளெல்லாம்
 அஞ்சி அஞ்சிச் செத்து வந்தானோ
 கடைசியில்  அது நடந்து விட்டது.
மண்டியிட்டு குமுறிக் கொண்டிந்தவனிடம்
" அதை நடத்திப் பார்க்கத்தானே உனக்கு வாழ்நாளே..." 
என்று சொல்லிவிட்டு
அண்டங்கள் நடுங்கச் சிரிக்கிறது
காலம்.

Comments

Popular posts from this blog

வாழ்த்து

  அ வன் ஒரு மேதை அல்லது அப்படியொரு நினைப்பு நிகழ் குழம்பாமல் அவன் என்ன மேதை? குறிப்பேட்டில் குனிந்திருந்தவன் தேநீர் பரிமாறிய  துப்புரவு  பணியாளிடம்  நெற்றியைச் சுருக்கியபடி கேட்டான்.. "இன்னைக்கு தேதி என்ன..?" அவள் சொன்னாள் "உறுதியாகத்தானா...உன்னை நம்பலாமா?" "சார்.. நேத்துத்தான் என் ஒரே மகளின் பிறந்த நாள்.." நிமிர்ந்து நோக்கியவன் பாட்டைப் போல ஒன்றைப் பேசினான் "எனில் , இருபத்தைந்தேதான்.. ஒரு வேளை முப்பத்தியிரண்டே  ஆனாலும் இருபத்தைந்துதான்.."

இருவர்

வெ க்கையும் சரக்கொன்றையும் ஒன்றாக வந்துவிட்டனர். வாசலில் வந்து நிற்கும் இருவரில் ஒருவரை மட்டுமா உள்ளே அழைக்க முடியும் ?

ஒளி வளையத்துள் ஒரு தூசு

மு துகெலும்பு வெளிக்கிளம்ப  தவமியற்றல் அவசியமில்லை. ஞானமடைய  எளிய வழிகள் நிறைய உண்டு அதிலொன்று ICU வில் கிடத்தல் அதுவும் அம்மணமாய்க் கிடத்தல் 'நிர்வாணம் அடைதல் ' என்பதை ஆகச்சிக்கலான தத்துவம் எனக்கருதி பயின்று பயின்று குழம்பிக் கொண்டிருந்தேன். உடலில் ஒன்றுமில்லாதபோது எதிலும் ஒன்றுமில்லை என்பது விளங்கத் துவங்கிவிடுகிறது கண்களில் பீளைகட்டியிருக்கும் போது நன்றாகவே தெரிந்தது என் தலை சுற்றி ஓர்  ஒளி வளையம் கண்ணில் பீளை என்பதால் உதித்த வளையம் என்னால் இப்போது சித்தார்தனுடன்  அமர்ந்து  ஓரளவு உரையாட முடியும் ஆயினும் ஞானத்தின் மீது ஒரு சின்னதூசாய் 'ஹேமா' என்கிற ஒரு  பெயர் நண்பர்காள்.. முந்தைய ஜென்மத்தில் மான்களாகப்   பிறந்தால் மட்டுமே இந்த ஜென்மத்தில் செவிலியராய் பிறக்க இயலும். இது ஒரு ஞானம் அவ்வளவு பெரிய சொல் வேண்டாம் எனில் இது ஒரு உண்மை