நேற்று இரயில் முன் பாய்ந்து கூழாகிப் போனவனுக்கு எண்ணற்ற நண்பர்கள் நாலைந்து காதல்கள் அத்தனை தோள்கள் அத்தனை மடிகள் அவனது ரயில் எப்போது கிளம்பியதென உறுதியாகச் சொல்ல இயலவில்லை. அது நெருங்க நெருங்க ஒவ்வொரு தோளாக மாயத்தில் மறைந்தன. ஒவ்வொரு மடியாக விலகிப்போயின. ஆழிசூழ் உலகு அவனும் இரயிலுமாக அவ்வளவு சுருங்கிவிட்டது அவன் அந்த இரயிலை எதிர்நோக்கி நின்றிருக்கிறான். அனந்தகோடி தோள்களும் அனந்தகோடி மடிகளும் கொண்ட அது அதோ அவனை நெருங்கிவிட்டது. |
Comments