Skip to main content

கொக்கின் கீதம்

 


தோ ஒரு தூரதேசம்…

புல்வெளிப்பரப்பின் 
பின்னணியில் நின்று கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறான் 
ஒரு பாடகன்.

மேலே
மழைக்கருப்பின் ரம்மியத்தில்
பூத்திருக்கிறது வானம்.

அப்போது
அந்நிலக்காட்சியை
ஊடறுத்துப் பறந்ததொரு கொக்கு

ஐயோ…!

அது 
அவன் பாட்டையே தூக்கிக்கொண்டு பறக்கிறது.
பாட்டு பறக்க
அவனும் பறந்தான்.
அவனோடு பறந்தன
பச்சையும் கருப்பும்.
பார்த்திருந்த நானும் பறந்தேன்
சேர்ந்து.

Comments

Popular posts from this blog

சிரம்தாழ்ந்த விண்ணப்பம் !

  கே ரட் கண்ணிற்கு மிக நல்லது இரு, இரு  பச்சையாக உண்பதே நல்லது முட்டை புரதச்சத்து மிக்கது இரு இரு  வெள்ளைக்கரு மட்டும்தான் நல்லது கீரை யுண்டால், பீடை யில்லை இரு, இரு முட்டையுடன் உண்டு தொலைக்காதே  ஆப்பிள் ஒரு  இரத்தக் காட்டாறு இரு, இரு உப்பிட்ட வெந்நீரில் நன்றாகக்  கழுவ வேண்டியது அவசியம் வானகமே, இளவெயிலே, மரச்செறிவே! இரு, இரு பால்காரன் வந்துவிட்டானா? ஆற்றுக்குளியல்  அருமையோ அருமை இரு, இரு கிடங்குகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது உடற்பயிற்சி மிக மிக முக்கியம் இரு, இரு அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு தூங்காதே தம்பி, தூங்காதே! இரு, இரு எவ்வளவு உறக்கமோ, அவ்வளவு ‘விழிப்பு’ வெளி திறந்து கிடக்கிறது இரு, இரு ஃபீல் அட் ஹோம் பணத்தினைப் பெருக்கு இரு, இரு ரஸத்திலே தேர்ச்சி கொள் “நீ வாழ பிறரைக் கெடுக்காதே” இரு, இரு வலுத்ததே வாழும் பிறப்பு என்றிருந்தால் இறப்பு என்றிருக்கவே செய்யும் இரு, இரு சுமாராகவேனும் வாழ்ந்திருக்க வேண்டும் உன்னதங்களின் உன்னதம்  எதுவென்றுரைத்தால்  அது கவிதைதான் இரு, இரு கவிதையைப் பார்த்துக் கொண்டே  வாழ்கையை கோட்டை விட்டு விடக்கூடாது....

இசை கவிதைகள் - அகழ்

  இரண்டு மாணவிகள் ஒ ரு குறிப்பிட்ட பாடத்தைச்  சுட்டி அதைப்  படித்துவிட்டாயா என்று கேட்கிறாள் ஒருத்தி “அய்யே… அந்தப் பாடம் நல்லாவேயில்ல” என்கிறாள் இன்னொருத்தி கேள்வி கல்லூரியின் மூன்றாவது மாடியிலிருந்து எழுகிறது பதில்   ஆரம்பப்  பள்ளியிலிருந்து வருகிறது *** காய்ச்சல் வீணை நா ன் அனத்திக் கொண்டிருக்கிறேன் இப்படி விடாமல் அனத்தும் அளவு அவ்வளவு பலஹீனம் இப்போது இல்லை. ஆயினும் நான் அனத்திக்கொண்டிருக்கிறேன். அனத்தி அனத்தி அனத்தி அனத்தி காய்ச்சல் வீணையில் ஒரு பாடல் இழையோடிவிட்டது நான் பாடிக் கொண்டிருக்கிறேன் *** அந்தோ! அந்தத் தம்பி தா ன் இல்லாவிட்டால் இந்த உலகிற்கு ஒன்றும் ஆகிவிடாது என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும் அறிந்ததேயானாலும் தான் இல்லாமல் ஆகி ஒன்றுமே ஆகிவிடாத உலகை நேற்றிரவு அவன் கண் கொண்டு கண்டான் அறிந்ததெல்லாம் காண்பமென்றல் அவ்வளவு ஈஸியோ தம்பி? *** மலர்க்கூட்டம் பூ ப்பூவாய் பூத்திருக்கும் பெரிய மரத்தின் கீழே தன் சைக்கிளை நிறுத்திவிட்டு விளையாடச் செல்கிறாள் சிறுமி இத நிழலில் நின்றிருக்கும் சைக்கிளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் காற்றாடும் கிளைகளுக்கடியில்...

நாணத்தை நடிக்க முடியுமா?

கபிலர் கவித்துவத்திரட்டு  தொடரில்  ' கலித்தொகை' பாடல்கள் துவங்கியுள்ளன. கபிலரின்  கவித்துவ உச்சங்கள் நிகழ்ந்துள்ள நூல் என்று கலித்தொகையைச் சொல்லலாம். வரிக்கு வரி அடிக்கோடிட வேண்டிய பல பாடல்களைக்  கொண்டது.  நாடகத்தன்மையின் சுவாரஸ்யம் நிரம்பியது.  இத்தொடரில்  இதுவரை வெளியான கட்டுரைகளில் இதுவே சிறந்தது என்பது என் எண்ணம். காரணம், கட்டுரையாளன் அல்ல, கவிஞன். "நாணத்தை நடிக்க முடியுமா?" இணைப்பு : https://akazhonline.com/?p=12972 https://akazhonline.com/?p=12972 நன்றி அகழ்!