தெருவில் குந்தியிருக்கும் அவருக்கும் தெருவில் படுத்துறங்கும் நாய்களுக்கும் எப்படியோ சிநேகம் உருவாகிவிட்டது. காவல்பணி முடித்து அதிகாலையில் வீடு திரும்புகையில் நான்கு ஜீவன்களை அழைத்துக் கொண்டு பேக்கரிக்கு ஊர்வலம் போவார். ஒரு கட்டு பிஸ்கட்டை உடைத்து மழையைத் தூவுவது போல் தூவிவிடுவார். அவருக்கும் நாய்களுக்கும் இடையே இருந்த பிஸ்கட் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து நாளடைவில் வேறொன்று பூத்துவிட்டது. இப்போதெல்லாம் மாதக் கடைசிகளில் அவர் தூவுவது போல் தூவுகிறார். அவை உண்பது போல் உண்கின்றன. |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments