ரோட்டோரத்து சேலைத்தூளியில் ஆடிக்கொண்டிருக்கிறது ஒரு குழந்தை. வேடிக்கை காட்டியபடியே ஆட்டுகிறாள் ஒரு சின்னஞ்சிறுமி. அவள் ஆடுகிறாள் பாடுகிறாள் அபிநயிக்கிறாள் சேலையை மூடித்திறந்து மூடித்திறந்து " பூச்சாண்டி ஆட்டம்" ஆடுகிறாள். குதூகலிக்கிறது குழந்தை ஒவ்வொரு முறையும் முதல்முறை போன்றே. இதைப் பார்த்தபடி அமர்ந்திருந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக வழுக்கிக் கொண்டு போய் விளையாட்டுள் விழுந்துவிட்டேன். இப்போது நான்தான் சேலைத்தூளியாம் என்னை திறந்து திறந்து எட்டிப்பார்க்கிறது குழந்தை. |
Comments