எனக்கென்று ஒரு குட்டிச்சுவர் இருந்தது. அதில் நண்பர்களோடு அமர்ந்து கொண்டு நாளெல்லாம் அரட்டையடிப்பேன். எதையும் கூர்ந்து நோக்காமல் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருப்போம். ஆம்புலன்ஸின் நாசகார ஊளைகளின் ஊடே பெருக்கெடுத்து ஓடியது உலகு. ஒரு நத்தை ஊர்ந்து வருவதை அங்குதான் முதன்முதலில் பார்த்தேன். குட்டிச்சுவர் என்பது கொஞ்சமாக இடிந்தது கொஞ்சமாகப் பறப்பது. எவனோ ஒரு சீர்திருத்தவாதி ஒழித்துக் கட்டினான் எல்லாக் குட்டிச்சுவர்களையும். என் மகனுக்கு இல்லை அந்தச் சுவர். வேண்டுமானால் பாருங்கள் அவன் உருப்படாமல்தான் போகப் போகிறான். நன்றி : காலம் ஜனவரி - 21இதழ் |
Comments