இந்தநாள் ரொம்பவே சலித்துவிட்டது. பல்லாண்டுகள் தொடர்பற்றுப் போன பழைய நண்பர் ஒருவரை போனில் அழைத்தேன். நண்பர் 15 விநாடிகளுக்குள் சலித்துவிட்டார். அவரது பின்னணியில் இதுவரை கேட்டறியாத குருவியொன்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. நானும் அதுவும் உரையாடத் துவங்கிவிட்டோம். அதன் ஒவ்வொரு பாடலுக்கும் என் தலைக்கு மேலே கிளைகள் தழைத்து மரமாகி மலராகி வனமொன்று அடர்ந்து வந்தது. மறுமுனையில் நெடு நேரம் பேச்சற்று இருப்பதை உணர்ந்த பழைய நண்பர் சற்றே உரக்கக் கத்தினார்.. “கேட்கிறதா...?” “கேட்கிறதா...?” “நன்றாகக் கேட்கிறது” என்றேன். |
Comments