சும்மா இருக்கும் போது காலாட்டிக் கொண்டு சும்மா இருக்க வேண்டும். நான் ஒரு பழைய அகராதியைப் புரட்டினேன். அது ' அகம் ' என்றால் ' பாவம்' என்றது. காலாட்டம் நின்று விட்டது. என் அகம் பாவம் என்பது எனக்கே தெரியும் நான் என் அம்மாவின் அகம் ? என்றேன் அது ஆம் என்றது கல்யாண் ஜியின் அகம்? அது ஆம் என்றது. கார்ல் மார்க்ஸின் அகம்? அது ஆம் என்றது. நல்லதங்காளின் அகம்? அது ஆம் என்றது திருமாவளவனின் அகம்? அது ஆம் என்றது அன்னை தெரசாவின் அகம்? அது ஆம் என்றது. மகாத்மா காந்தியின் அகம்? அது ஆம் என்றது. ஆம்! ஆம்! ஆம்! கண்ணீர் என்றால் கண்ணீர்தானே அகராதியே? |
என் ஊருக்குப் பின்னே ஒரு மலை இருக்கிறது. வாழ்வின் அர்த்தம் தேடிக் கிளம்புபவர்கள் இந்த மலை மீது ஏறுவது வழக்கம் சில ஊழிகள்தான் கடந்திருக்கின்றன அதற்குள் அவ்வளவு அவசரம் வாழ்வைக் கண்டு பிடிக்க இப்படிக் கிளம்புபவர்கள் பொதுவாக திரும்பி வருவதில்லை கண்டார்களா என்பதற்கும் பதில் இல்லை அடிவாரத்தில் ஓர் ஆட்டிடையன் இருக்கிறான் எவ்வளவோ பார்த்துவிட்டான் இது போல் அவனுக்குத் தெரியும் வாழ்வின் அர்த்தம் ஆடென. நன்றி : உயிர்மை : ஆகஸ்ட் - 18
Comments