Skip to main content

மூன்று கவிதைகள்




றுமணம் கொண்ட விசாலமான படுக்கை


நட்சத்திர விடுதியின்

விசாலமான அறையைத்

திறந்து காட்டிய  பணியாள் 

"நன்றி!"  என்று

சொல்லிவிட்டு நகர்கிறான்.


நான்

உடைந்து அழுகிறேன்


*


சப்பின் குஷன்


நான் மீண்டும்

கசப்பிற்குத் திரும்பினேன்.


மகனைப் போருக்கு அனுப்பி விட்ட தாய் போல

அது வாசலிலேயே நின்று கொண்டிருந்தது


கசப்பு 

ஒரு செளகர்யம்

ஆதுரம்


மேலும் அது எனக்கு
நன்கு பரிச்சயமானது

அதில்
பரபரப்பில்லை.
பதற்றமில்லை

சாகசங்களில் வெறி மூண்ட 
வேட்டையாள் ஒருவன்
துப்பாக்கியை இறக்கி வைத்து விட்டு
இப்போது
புளியமரத்தடியொன்றில்
தலை சாய்த்துக் கிடக்கிறான்

கசப்பில்
கசப்பைத் தவிர 
வேறு ஒன்றுமேயில்லை

முக்கியமாக
இனிப்பில் இருக்கிற
"உள்ளே என்ன இருக்கிறதோ?" 
என்கிற
வெடிகுண்டில்லை

*

ல்லாவற்றிற்கும் நன்றி!

காதலர்
வெடித்துச் சினக்கின்றனர்.

கண்ணீர் வடிக்கின்றனர்.

பிரிவே உத்தமம்  என்று 
உறுதி பூண்கின்றனர்

"எல்லாவற்றிற்கும் நன்றி!" 
என்றவர்கள்
பரஸ்பரம் செய்தி அனுப்பிக் கொள்கையில்
"எதுவுமே இன்னும் முடியவில்லை" என்று
எங்கிருந்தோ ஒலிக்கும் ஒரு குரல்...

அது யாருடைய குரல்

Comments

Popular posts from this blog

சமீபகால பிரச்சனைகளில் ஒன்று

  ஆ மாம், அப்படித்தான் கேவலன்தான் பரதேசி தெருத் தெருவாக  அலைவது போலே முகநூல் முழுக்கத் திரிவேன். குப்பை மேட்டின் முன் குந்தி அதைக் கிளறிக் கிளறி   ஆராய்ந்து கொண்டிருக்குமே  ஒரு பைத்தியம்  அது  கூட நான்தான். சந்தேகம் எழும்  ஆண்களின் கணக்குகளைத்  திறந்து ஒன்றுவிடாமல்  துப்பறிவேன் என்னைத் தவிர  எனக்கு எல்லார் மேலும் சந்தேகம் உயிர் நண்பர்கள் ஆபத்தானவர்கள்  ஆகவே முதலில் அவர்களிடமிருந்தே துவங்குவேன் அங்கு நீ இட்ட இதயக்குறி ஒன்று சடசடவென  எரிந்து கொண்டிருக்கும் . அப்போது நான் என் நெஞ்சிற்குச் சொல்லுவேன்.. “ஒன்றுமில்லை. துளியூண்டு சிவப்பு மை குட்டு, அவ்வளவு தான்". அதுவும் திருப்பி எனக்கு அதையே சொல்லும் “நடுங்காதே.. துளியூண்டு சிவப்பு மை குட்டு , அவ்வளவே".

மயிலுக்குத் துடிப்பவன் மனைவிக்குச் சுடுபவன்

கபிலர் கவித்துவத்திரட்டின் அடுத்த கட்டுரை அகழ் இதழில் வெளியாகியுள்ளது. இந்தக் கட்டுரையுடன் கபிலரின் புறப்பாடல்கள் நிறைவடைகின்றன. இனி முழுக்கவும் அகப்பாடல்கள்தான். .. மயிலுக்குக் குளிரும் எனும்படிக்கு இரக்கம் கொண்டவனால் , மனைவிக்குக் கொதிக்கும் என்பதை அறியமுடியவில்லையா? அது அப்படித்தான். விசேஷமான ஒன்றில் ஆகச்சிறந்தவராய் விளங்கும் ஒருவர் , சாதாரண ஒன்றில் தடுமாறிச் சரிவதை நாம் காலகாலமாக பார்த்து வருகிறோம். மயிலுக்கு இரங்கி, மனைவிக்கு இரங்கா மாண்பை எந்தச் சோதனைக் கூடத்தில் இட்டு பரிசோதிப்பது? எவ்வளவு ஆய்ந்தாலும் அதில் குழப்பமான முடிவுகளே வரக்கூடும். மேலும் காமம், எதிலும் துளையிட்டுவிடும் ஒரு ராட்சத இயந்திரம்... முழுவதும் வாசிப்பதற்கான இணைப்பு கீழே  உள்ளது https://akazhonline.com/?p=12302

சத்தியத்தை மீட்டுதல் - சுப்பிரமணிய பாரதி கவிதைகள்

                                 2000- த்தின் துவக்கம்..  கவிதையுடன் போர் ஆடிக்கொண்டிருந்த காலம். என் முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்திருந்தது.  அதை என் ஆதர்ஷ எழுத்தாளர் ஒருவருக்கு அனுப்பி இருந்தேன்.  நூலை வாசித்துவிட்டு அவர் எழுதியிருந்த பதில் கடிதத்தின் முடிவு இப்படி இருந்தது.. “ எழுத்திற்கு நான் என்றென்றைக்குமாக கைக்கொள்ளும் சூத்திரம்... தெளிவுறவே அறிந்திடுதல் : தெளிவு தர மொழிந்திடுதல் ” . இவை சுப்பிரமணிய பாரதியின் வரிகள். இந்தச் சூத்திரம் இன்று வரை என் எழுத்தை இயக்கிக் கொண்டிருப்பதாகவே உணர்கிறேன். இதுதான் மெய்யறிவு இல்லாத விஷயங்களில் வெட்டியாக வாயாடக்கூடாது என்று எச்சரித்து வைத்தது. இதுதான் கறிவெட்டும் கத்தியுடன் காத்திருந்த மொழியின் கசாப்புக் கடைக்காரர்களிடம் இருந்து என்னை தடுத்தாட்கொண்டது. எனவே இந்த சூத்திரத்திற்கும் இதன் சூத்திரதாரிக்கும் எனது வந்தனங்கள்.     பாரதியின் நிறைய கவிதைகள் தமிழர்களுக்கு மனப்பாடம். அதை சங்கீதக்காரர்கள் , சினிமாக்காரர்கள்,...