முன்பு புதர் திருத்த வந்த இளைஞர்களில் ஒருவன் என்ன நினைத்தானோ ஏது நினைத்தானோ திடீரென அரிவாளை எறிந்து விட்டு வேகமெடுத்து ஓடி எழும்பிக் குதித்து கைகளைச் சுழற்றி இல்லாத பந்தை தூர வீசினான். நடுக்குச்சி தெறித்தே விட்டது ஆரவாரம்...! ஆரவாரம்...! கூச்சலற்ற ஆரவாரம்! மனம் சூம்பிக் கிடக்கும் இந்நாளில் வழிப் பிள்ளையாருக்கு வணக்கம் சொல்லும் பக்தனென முத்தம் வைத்து நடக்கிறேன் இன்னும் அந்தரத்தில் அப்படியே நிற்கும் அந்தப் பந்திற்கு |
Comments